மலாவின் தலைநகரான லிலோங்வேயில் இருந்து காலை 09:17 மணிக்கு, மலாவியின் துணை அதிபர் சிலிமா மற்றும் அவருடன் பயணித்த ஒன்பது பேருடன் கிளம்பிய ராணுவ விமானம் நடுவானில் திடீரென தொடர்பை இழந்து விட்டது.
இதனை மலாவியின் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அமைச்சரவை தெரிவித்தது.
மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் கிளாஸ் சிலிமாவை ஏற்றிச் சென்ற காணாமல் போன விமானம் கண்டுபிடிக்கப்படும் வரை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடரும் என்று தென்னாப்பிரிக்க நாட்டின் ஜனாதிபதி, திங்கள்கிழமை அன்று தெரிவித்தார்.
விமானம் ரேடாரில் இருந்து விலகியதிலிருந்து விமானத்துடன் தொடர்பு கொள்ள விமானநிலைய அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததாக அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த விமானம் காலை 10:02 மணிக்கு Mzuzu விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டது.