பாகிஸ்தான் ராணுவத்தின் சொத்துகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான 12 வழக்குகளில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி ஆகியோருக்கு பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தான் பொது தேர்தல் நடைபெற்றது.
அந்த தேர்தலில் போட்டியிட இம்ரான் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், அவரது ஆதரவாளர்கள் சுயாட்சியாக நின்று பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி ஆகியோருக்கு பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.