மன ஆரோக்கியம்: ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 2ஆம் தேதி, உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது.
மேலும், ஏப்ரல் மாதம் முழுவதுமே ஆட்டிசம் மாதமாக கடைபிடிக்கப்படுகிறது.
ஆட்டிசம் என்ற மன வளர்ச்சி குறைபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுவதற்கும், ஆட்டிசம் உள்ளவர்களுக்கு ஏற்ற சமூகமாக நமது சமூகத்தை மாற்றுவதற்கும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
பொதுவாக, ஆட்டிசத்துடன் வளரும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், பேச்சு குறைபாட்டுடனும், பிற மன வளர்ச்சி குறைபாட்டுடனும் இருப்பதை மட்டுமே நாம் அதிகம் பார்த்திருக்கிறோம்.
ஆனால், லேசான ஆட்டிசம் கொண்டவர்களும் அதிகம் இருக்கிறார்கள்.
அவர்கள் சாதாரண மனிதர்களை போலவே செயல்பட்டாலும், லேசான ஆட்டிசம் கொண்டவர்களுக்கு சமூகத்துடன் ஒன்றி வாழ்வது மிக சிரமமாக இருக்கும்.