தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. பறந்தது புதிய அதிரடி உத்தரவு…!!! 

Estimated read time 1 min read

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி உள்ளது.

இந்த திட்டங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட உள்ளன. இந்த நிலையில் தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வகங்களில் ஆய்வு கூட உபகரணங்கள், இருப்பு பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்.

வெப்பப்படுத்தும் உபகரணங்களை பாதுகாப்பாக கையாளுவதை உறுதி செய்திட வேண்டும். ஆய்வகங்களை நல்ல முறையில் பயன்படுத்த ஜூலை 8 முதல் ஜூலை 10-ம் தேதி வரை சுத்தப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Please follow and like us:

You May Also Like

More From Author