மதுரை அரசு தொழில் நுட்பக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

Estimated read time 1 min read


தமிழ்நாடு அரசு பலவகைதொழில் நுட்பக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடந்தது. 2020-2023 கல்வி ஆண்டை சேர்ந்த 298 மாணவ மாணவிகள் தங்களது டிப்ளமோ பட்டங்களை பெற தகுதி பெற்றிருந்தனர்.

மதுரை மகளிர் அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர், கீதாஞ்சலி,, மதுரை, தலைமை விருந்தினராக வருகை தந்து சிறப்பித்தார். மற்றும் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பல்தொழில் நுட்பக் கல்லூரி முன்னாள் முதல்வர் விஜயா, விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினர்கள் கீதாஞ்சலி மற்றும் விஜயா மாணவர்களுக்கு டிப்ளமோ சான்றிதழ்களை அளித்தனர். மேலும் முதல் மூன்று இடங்களை பெற்று சிறப்புற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பட்டயங்களை பெற்ற பின் மாணவ மாணவிகள் தங்கள் பொறியாளர் தொழிலுக்கான நெறிமுறை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


தமிழ்நாடு அரசினர் பல் தொழில்நுட்பக் கல்லூரி தேன்மொழி விழாவிற்கு தலைமையேற்று உரை நிகழ்த்தினார். துணை முதல்வர் ஹேமசித்ரா வரவேற்புரையாற்றினார். அனைத்து துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள் அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author