வள்ளுவம்.

Estimated read time 1 min read

Web team

IMG_20240409_091039.jpg

வள்ளுவம் வாழ்வதெங்கே ? கவிஞர் இரா .இரவி !

மழை வெள்ளத்தில் சென்னையில் வாடியோரை
மனிதநேயத்தோடு காத்தவர்களிடம்
வாழ்கிறது வள்ளுவம் !

ஆதரவற்றோர் இல்லம் நடத்தி
அன்பு காட்டும் உள்ளங்களில்
வாழ்கிறது வள்ளுவம் !

நன்றி மறக்காது பெற்றோர்களிடம்
நன்றி காட்டும் இதயங்களில்
வாழ்கிறது வள்ளுவம் !

நேர்மையான அதிகாரிகளின்
நெஞ்சுரத்தில் வாழ்கிறது
வாழ்கிறது வள்ளுவம் !

சாதி மதம் கடந்து எல்லோரிடமும்
சகோதரத்துவம் பேணுவோரிடம்
வாழ்கிறது வள்ளுவம் !

தவறவிட்ட பணத்தின் மீது ஆசையின்றி
அப்படியே திருப்பித்தரும் ஓட்டுனரிடம்
வாழ்கிறது வள்ளுவம் !

ஊழல் செய்து கொள்ளை அடித்ததற்காக
தண்டனை அனுபவிக்கும் போது
வாழ்கிறது வள்ளுவம் !

அசைவம் வேண்டாம் சைவம் போதும்
மருத்துவர் வாக்கில்
வாழ்கிறது வள்ளுவம் !

மதுககடையை மூடச் சொல்லும்
சமூக சேவகர்களிடம்
வாழ்கிறது வள்ளுவம் !

செயற்கை உரம் வேண்டாம் எனும்
சமூக ஆர்வலர்களிடம்
வாழ்கிறது வள்ளுவம் !

மரத்தை வெட்டாதீர்
மன்றாடும் மனிதர்களிடம்
வாழ்கிறது வள்ளுவம் !

உண்மையில் மரம் நடும்
உணர்வாளர்களிடம்
வாழ்கிறது வள்ளுவம் !

வள்ளுவம் பரப்பிடும் தமிழ்
அறிஞர்கள் உள்ளங்களில்
வாழ்கிறது வள்ளுவம் !

Please follow and like us:

You May Also Like

More From Author