இந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமாகவிருக்கும் செடான் வகைகள்

Estimated read time 1 min read

சமீபத்திய சரிவு இருந்தபோதிலும், இந்தியாவில் செடான் துறை மறுமலர்ச்சிக்குlp தயாராக உள்ளது.
மாருதி சுஸுகி , சிட்ரயன், ஹோண்டா மற்றும் ஸ்கோடா ஆகிய நிறுவனங்களின் புதிய மாடல்கள் வரவிருப்பதே இதற்குக் காரணம்.
இந்த ஆண்டு முழுவதும் புதிய மாடல்களை வெளியிட, இந்த பிராண்டுகள் தயாராகி வருகின்றன.
ஹோண்டா அமேஸ்: இந்த வரிசையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெளியீடுகளில் ஒன்றான மூன்றாம் தலைமுறை ஹோண்டா அமேஸ், 2024இல் இந்திய சந்தையில் நுழைய திட்டமிடப்பட்டுள்ளது.
வெளிவரவிருக்கும் ஹோண்டா அமேஸ், கணிசமான வெளிப்புற மற்றும் உட்புற மேம்பாடுகளை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதுப்பிப்புகள் ஹோண்டா வழங்கும் அக்கார்ட் மற்றும் சிவிக் போன்ற சமீபத்திய உலகளாவிய செடான்களுடன் ஒத்துப்போகின்றன. புதுப்பிக்கப்பட்ட அமேஸ், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் விருப்பங்களை வழங்கும்.

Please follow and like us:

You May Also Like

More From Author