சாலையை கடக்க முயன்ற முதியவர்…. திடீரென நடந்த துயர சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

Estimated read time 1 min read

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வன்னி மேடு கிராமத்தில் கலைச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அடுக்கம்பாரை மருத்துவமனையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். நேற்று காலை கலைச்செல்வன் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை கடக்க முயற்சி செய்தார்.

அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ கலைச்செல்வன் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த கலைச் செல்வனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கலைச்செல்வன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Please follow and like us:

More From Author