தமிழகத்தில் மின் விபத்து தடுப்பு செயலி…. மின்சார வாரியம் அறிமுகம்…. இன்று முதல் அமல்….!!!!

Estimated read time 1 min read

தமிழ்நாடு மின்சார வாரியம் ஊழியர்களுக்கு மின் விபத்தை தடுப்பது குறித்த புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. மின்விபத்துக்களால் ஊழியர்கள் உயிரிழப்பதை தடுக்க மின்விபத்து தடுப்பு பணிக்கு தனி மொபைல் போன் செயலியை உருவாக்க மின்வாரியம் முடிவு செய்தது.

அதன்படி டான்ஜெட்கோ சேப்டி- உன் பாதுகாப்பு உன் கையில் என்ற மொபைல் போன் செயலி இன்று டிசம்பர் 1ஆம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வருகிறது. இதன்படி, பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்காமல் விபத்து ஏற்பட்டால் பணியாளர்களே பொறுப்பு என அண்மையில் மின்சார வாரியம் தெரிவித்த நிலையில் புதிய செயலி இன்று முதல் அமலுக்கு வருகிறது.

 

Please follow and like us:

More From Author