தனக்காக பணம் வாங்காமல் இசையமைத்தவர் இளையராஜா!- நடிகர் ராமராஜன்

Estimated read time 0 min read

தனக்காக பணம் வாங்காமல் இசைஞானி இளையராஜா இசையமைத்து கொடுத்துள்ளார், என நடிகர் ராமராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை, சாலிகிராமத்தில் சாமானியன் படக்குழுவின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் நடிகர் ராமராஜன், படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய நடிகர் ராமராஜன்,

தனக்கு வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர், இயக்குனர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் என தெரிவித்தார்.

தனது திரைப்படங்களை கிராம மக்கள் இன்றளவும் கொண்டாடி வருவதற்கு காரணம் இளையராஜாவின் இசை என தெரிவித்தார்.

தனக்காக பணம் வாங்காமல் இசைஞானி இளையராஜா இசையமைத்து கொடுத்துள்ளார்.

இந்தப் படத்தில் சாமானியன் என்ற ஒரு தலைப்பை சொன்ன உடனே ஒப்புக்கொண்டு விட்டேன் எனவும் நடிகர் ராமராஜன் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author