சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘ப்ளூ ஸ்டார்’.
அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு மற்றும் ப்ரித்வி ஆகியோர் நடித்த இந்த படத்தை பார்த்து, நடிகர் விஜய் சேதுபதி பாராட்டியுள்ளார்.
இதனை ப்ரித்வி பாண்டியராஜன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, விஜய் சேதுபதிக்கு தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், “இந்த தம்பிக்காக நேரம் ஒதுக்கி என்னுடன் சேர்ந்து ” Bluestar” பார்த்ததற்கு நன்றி அண்ணா♥️♥️♥️.படம் உங்களுக்கு பிடித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
என் வீடு வந்து என்னையும், எங்களுடைய படக்குழுவையும் பாராட்டியதற்கு நன்றி. “Sam happy annachi!!” என குறிப்பிட்டுள்ளார்.
ப்ரித்வி முன்னதாக விஜய் சேதுபதியுடன் ‘லாபம்’, ‘டிஎஸ்பி’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.