அன்திகுவா மற்றும் பர்புடாவின் தலைமையமைச்சருடன் ஷிச்சின்பிங் சந்திப்பு

ஜனவரி 24ஆம் நாள் மாலை சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் மக்கள் மாமண்டபத்தில் சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள அண்டிகுவா மற்றும் பர்புடாவின் தலைமையமைச்சர் ஜஸ்துங் புரோன்னைச் சந்தித்துப் பேசினார்.

தலைமையமைச்சர் புரோன் ஒரே சீனா என்ற கோட்பாட்டை உறுதிப்படுத்தி, சீனாவின் மைய நலனுடன் தொடர்புடைய முக்கிய பிரச்சினைகளில் சீனாவுக்கு ஆதரவு அளிப்பதை, ஷிச்சின்பிங் பாராட்டினார்.

புதிய நிலைமையில் அண்டிகுவா மற்றும் பர்புடாவுடன் நெடுநோக்கு தொடர்பை வலுப்படுத்தி, இரு நாட்டுறவில் மேலதிகமான சாதனைகளை எட்டுவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என சீனா விரும்புவதாக ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

புரோன் பேசுகையில், வளரும் நாடுகள், சீனாவுடன் இணைந்து மேலும் இணக்கமான புவிகோளத்தைக் கூட்டாக உருவாக்கி, முழு உலகளவிலும் நியாயமான வளர்ச்சியை விரைவுபடுத்தும் விருப்பத்தைத் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author