ஜனவரி 4ஆம் நாள் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அமெரிக்காவிலுள்ள லோவா மாநிலத்தின் நண்பர் சாரா ராண்டிக்குப் பதில் கடிதம் அனுப்பினார்.
இதில் ஷிச்சின்பிங் கூறுகையில், சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 45 ஆண்டுகளில், சீன-அமெரிக்க மக்களின் கூட்டு முயற்சி காரணமாக, இரு நாட்டு உறவு பல சாதனைகளைப் பெற்றுள்ளது. சீன-அமெரிக்க உறவு தொடர்ந்து வளர்ச்சியடைய வேண்டுமென்றால், இரு நாட்டு மக்களையும் சார்ந்து இருக்க வேண்டும் என்றார்.
மேலும் ஷிச்சின்பிங் கூறுகையில், இளைஞர்கள், சீன-அமெரிக்க உறவின் எதிர்காலமாகும். அடுத்த 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் அமெரிக்க இளைஞர்கள் சீனாவில் பரிமாறிக்கொள்ளவும் கல்வி பயிலவும் அழைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கிறேன். இந்தத் திட்டத்தில் மஸ்கடீன் மாணவர்கள் பங்கேற்பதை நான் வரவேற்கிறேன். அமெரிக்காவுடன் இணைந்து சீன-அமெரிக்க உறவு நிதானமான சீரான மற்றும் தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்றச் சீனா விரும்புவதாக ஷிச்சின்பிங் தெரிவித்தார்.