இந்தியாவின் 75ஆவது குடியரசு தினம் குறித்து சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜனவரி 26ஆம் நாள் இந்திய குடியரசு தலைவர் முர்முவுக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.
சீரான சீன-இந்திய உறவு, இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்குப் பொருந்தியது. இது மட்டுமல்ல, பிரதேசம் கூட உலகின் அமைதி, நிதானத்தன்மை மற்றும் செழுமைக்குத் துணை புரியும் என்று ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.
அரசுத் தலைவர் முர்முவுடன் இணைந்து, சீன-இந்திய உறவு சீரான பாதையில் முன்னேற விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
அதே நாள் சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.