ஈரானில் நிகழ்ந்த கடும் பயங்கரவாத தாக்குதல் குறித்து சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஜனவரி 4ஆம் நாள், ஈரான் அரசுத் தலைவர் செயத் இப்ராஹிம் ரைசிக்கு ஆறுதல் தெரிவித்தார்.
சீன அரசு மற்றும் சீன மக்களின் சார்பில், உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவர்களின் குடும்பதினருக்கும் காயமுற்றோருக்கும் மனமார்ந்த ஆறுதலையும் அவர் தெரிவித்தார்.
மேலும், எந்த விடிவிலான பயங்கரவாதத்தையும் சீனா எதிர்ப்பதாகவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் நிலைப்புத் தன்மையைப் பேணிக்காப்பதற்கான ஈரானின் முயற்சிகளுக்கு சீனா உறுதியாக ஆதரவு அளிப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.