குவாங்டோங்-ஹாங்காங்-மக்கௌ பெரிய விரிகுடா பகுதியில், எல்லை நுழைவுக்கான முதலாவது சர்வதேச நெடுஞ்சாலை ஜனவரி 3ஆம் நாள் திறக்கப்பட்டது.
உஸ்பேகிஸ்தானிலிருந்து புறப்பட்ட சரக்குந்து ஒன்று குவாங்டோங் மாநிலத்தின் ஃபோஷான் சர்வதேச உலர் துறைமுகம் வழியாக குவாங்சோ சுங்கத்துறையில் நடைமுறைகளை நிறைவேற்றி அனுமதிக்கப்பட்டது.
வான், கடல் மற்றும் இருப்புப்பாதை போக்குவரத்துக்குப் பிறகு, குவாங்டோங்-ஹாங்காங்-மக்கௌ பெரிய விரிகுடா பகுதியை சீனாவுக்கு அப்பாலுள்ள பகுதிகளுடன் இணைக்கும் 4ஆவது வகை சர்வதேச வழியாக இந்நெடுஞ்சாலை திகழ்கிறது.
சரக்குப் பொருட்கள் மத்திய ஆசியாவிலிருந்து இப்பகுதிக்கு நேரடியாகச் செல்வதற்கு இது வசதியளித்துள்ளது.