சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடர் நிறைவு

Estimated read time 0 min read

சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 2ஆவது கூட்டத்தொடர் மார்ச் 11ஆம் நாள் மாலை 3 மணியளவில் பெய்ஜிங்கில் நிறைவடைந்தது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் உள்ளிட்ட கட்சி மற்றும் நாட்டின் தலைவர்கள் நிறைவு கூட்டத்தில் பங்கெடுத்தனர்.


அரசுப் பணி அறிக்கை பற்றிய தீர்மானம், புதிதாக திருத்தப்பட்ட அரசவை அமைப்பு சட்டம், 2023ஆம் ஆண்டு தேசியப் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி திட்டத்தின் செயல்பாடு மற்றும் 2024ஆம் ஆண்டு தேசிய பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி திட்டம் பற்றிய தீர்மானம், 2023ஆம் ஆண்டு மத்திய அரசு மற்றும் உள்ளூர் வரவு செலவு செயல்பாடு மற்றும் 2024ஆம் ஆண்டு மத்திய அரசு மற்றும் உள்ளூர் வரவு செலவு பற்றிய தீர்மானம், தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் பணி அறிக்கை பற்றிய தீர்மானம், உச்ச மக்கள் நீதி மன்றத்தின் பணி அறிக்கை பற்றிய தீர்மானம், உச்ச மக்கள் வழக்கறிஞர் மன்றத்தின் பணி அறிக்கை பற்றிய தீர்மானம் ஆகியவை இந்நிறைவு கூட்டத்தில் வாக்கெடுப்பு மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

Please follow and like us:

You May Also Like

More From Author