சிங்கப்பூர், பாகிஸ்தான், மலேசியா முதலிய நாடுகளைச் சேர்ந்த சீனாவுக்கான 42 தூதர்களின் நியமன பத்திரங்களைச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜனவரி 30ஆம் நாள் பிற்பகல் மக்கள் மாமண்டபத்தில் ஏற்றுக்கொண்டார்.
நியமன பத்திரம் சமர்ப்பித்த விழாவுக்குப் பிறகு, ஷிச்சின்பிங் தூதர்களிடம் உரை நிகழ்த்தினார்.
அவர் கூறுகையில், பல்வேறு நாடுகளின் மக்களுடனான நட்புறவுக்கு மதிப்பளித்து, சமத்துவம் மற்றும் ஒன்றுக்கு ஒன்று நன்மை புரியும் அடிப்படையில் பல்வேறு நாடுகளின் மக்களுடன் நட்புறவை ஆழமாக்கி, ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் முறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தி, இருதரப்பு உறவுகளின் தொடர்ச்சியான வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புவதாக தெரிவித்தார்.
சீனாவுக்கான பல்வேறு நாடுகளின் தூதர்கள் சீனாவைப் பன்முகங்களிலும் ஆழமாகவும் அறிந்து கொண்டு, இரு தரப்புகளின் உறவுக்கான ஒத்துழைப்பை மேம்படுத்தி, தகவல்தொடர்பு வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் விருப்பம் தெரிவித்தார்.