சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்ட சுரிநாம் அரசுத் தலைவர் சந்தோகியுடன் ஏப்ரல் 12ஆம் பிற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், சீன-சுரிநாம் நட்புறவு வாழையடி வாழையாக நிலவி வருவதோடு வலிமையாகவும் மாறியுள்ளது. இரு நாடுகள் ஒன்றுக்கொன்று மதிப்பளித்து, தெற்கு தெற்கு ஒத்துழைப்பின் முன்மாதிரியாக மாறியுள்ளது.
சுரிநாமுடன் இணைந்து, அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தி, பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்புகளையும் மானிட பண்பாட்டுப் பரிமாற்றங்களையும் விரிவுப்படுத்தி, மேலும் நெருக்கமான சீன-சுரிநாம் நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளி உறவின் உருவாக்கத்தை முன்னேற்றி, இரு நாட்டு மக்களுக்கு மேலும் சேவ்வனே நன்மை புரிய சீனா விரும்புகிறது என்றார்.
மேலும், சுரிநாம் உள்ளிட்ட வளரும் நாடுகளுடன் இணைந்து பலதரப்பு ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, கூட்டு நலன்களைப் பேணிக்காத்து, கூட்டு வளர்ச்சியை நனாவாக்கி, மனித குலத்தின் பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்தை முன்னேற்ற சீனா விரும்புவதாகவும் ஷி ச்சின்பிங் வலியுறுத்தினார்.
சந்தோகி கூறுகையில், இப்பயணத்தை வாய்ப்பாகக் கொண்டு, இரு நாட்டு அரசியல் கட்சிகளின் பரிமாற்றத்தை வலுப்படுத்தி, பொருளாதாரம் மற்றும் வர்த்தக முதலீடு, பசுமை வளர்ச்சி,. காலநிலை மாற்றத்துக்கான சமாளிப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தி, சுரிநாம்-சீன நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளி உறவை மேலும் ஆழமாக்க சுரிநாம் விரும்புகிறது என்றார்.