சீன-தென்னாப்பிரிக்க அதிபர்கள் செய்தியாளர் சந்திப்பு

தென்னாப்பிரிக்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட சீன அதிபர் ஷிச்சின்பிங் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமஃபோசாவைச் சந்தித்து செவ்வாய்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.


நட்புறவு, ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை ஆழமாக்க வேண்டும் என்றும் இரு நாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இரு தரப்புறவை மேலும் உயர் நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.


சீனாவும் தென் ஆப்பிரிக்கவும், முக்கிய செல்வாக்கு வாய்ந்த பெரிய வளரும் நாடுகளாகவும், புதிதாக வளரும் சந்தைகளாகவும் திகழ்கின்றன. இரு தரப்பும் நீதியை நிலைநாட்டுவதில் உலகளாவிய பங்காளிகளாக இருக்க வேண்டும் என்றும் இரு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.


பேச்சுவார்த்தைக்குப் பிற்கு ஷிச்சின்பிங்குவும் ரமஃபோசாவும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, சிரில் ரமஃபோசா, ஷிச்சின்பிங்கிற்கு Order of South Africa என்ற பதக்கத்தை அளித்தார்.


பிரிக்ஸ் அமைப்பின் 15-ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்க, ஷிச்சின்பிங் திங்கள்கிழமை தென்னாப்பிரிக்கா சென்றந்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author