சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேநீர் விருந்து

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டி, டிசம்பர் 29ம் நாள் காலை ஆங்கில புத்தாண்டுக்கான தேநீர் விருந்தை நடத்தியது. ஷிச்சின்பிங், லீச்சியாங் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாட்டின் தலைவர்கள், இதர கட்சி பிரதிநிதிகள், கட்சி சாரா பிரமுகர்கள், நாட்டின் பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் முதலியோர் இவ்விருந்தில் கலந்து கொண்டு, 2024ம் ஆண்டை வரவேற்றனர்.


சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங், இதில் முக்கிய உரை நிகழ்த்துகையில், சீனப் பாணியுடைய நவீனமயமாக்கம் மூலம், வல்லரசு ஆக்கப்பணி மற்றும் தேசிய மறுமலர்ச்சியை முன்னெடுப்பது, புதிய யுகத்தில் கட்சி மற்றும் நாட்டின் மையக் கடமையாகும்.

நாட்டுப்பற்றுடைய ஐக்கிய முன்னணியை வளர்த்து, ஒற்றுமையுடன் பல்வேறு சக்திகளைத் திரட்டி, மாபெரும் இலட்சியத்தை முன்னேற்ற வேண்டும். 2024ம் ஆண்டு, நவ சீனா நிறுவப்பட்ட 75வது ஆண்டு நிறைவாகும்.

2024ம் ஆண்டில், புதிய வளர்ச்சி அமைப்பு, உயர்தர வளர்ச்சி பெறுவது, சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பு அளவை ஆழமாக்குவது, அறிவியல் தொழில் நுட்பங்களின் தற்சார்பு, கிராமப்புறங்களுக்குப் புத்துயிர் ஊட்டுவது முதலிய துறைகளில் மேலதிக முன்னேற்றங்களைப் படைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author