சீன-வட கொரிய தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்து

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங்கும், கொரிய தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளரும், தேசிய விவகாரத் தலைவருமான கிம் ஜோங்-உனும், ஜனவரி முதல் நாள் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

2024ஆம் ஆண்டு, சீன-வட கொரிய நட்பார்ந்த ஆண்டாக அவர்கள் கூட்டாக அறிவித்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக, இரு தரப்புகளின் கூட்டு முயற்சிகளுடன், சீன-வட கொரிய பாரம்பரிய நட்பார்ந்த ஒத்துழைப்பு உறவு புதிய காலத்தில் முன்னேறியுள்ளது.

வட கொரியாவுடன் இணைந்து, பாரம்பரிய நட்புறவை முன்னெடுத்து சென்று, ஒன்றுக்கொன்று நெடுநோக்கு நம்பிக்கையை ஆழமாக்கி, பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, இரு நாட்டுறவின் மேலும் பெரும் வளர்ச்சியை முன்னேற்றி, பிரதேச அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணிக்காப்பதற்கு புதிய பங்காற்ற சீனா விரும்புவதாக ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author