ஏப்ரல் 29ஆம் நாள் சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் ஹேபெய் இரும்புருக்குக் குழுமத்தைச் சேர்ந்த ஸ்மேடேரைவோ இரும்பு தொழிற்சாலையின் செர்பிய தொழிலாளர்களுக்கு பதில் கடிதம் அனுப்பி, சீன-செர்பிய நட்புறவுக்கு புதிய பங்காற்ற வேண்டுமென்று ஊக்குவித்தார்.
கடித்த்தில் அவர் கூறுகையில் 2016ஆம் ஆண்டு செர்பியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட போது ஸ்மேடேரைவோ இரும்பு தொழிற்சாலையில் உங்களைச் சந்தித்தேன். சீன-செர்பிய பரஸ்பர நலன் தரும் ஒத்துழைப்புக்கு ஆதரவையும் இரும்பு தொழிற்சாலையின் அருமையான எதிர்காலத்தின் மீதான எதிர்ப்பார்ப்பையும் உணர்ந்துகொண்டேன் என்று ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார். இரும்பு தொழிற்சாலையின் சீரான வளர்ச்சி, இருநாட்டு பரஸ்பர நலன்தரும் ஒத்துழைப்பின் முன்மாதிரியாக இருக்கிறது. இந்தத்தொழிலாளர்கள், சீன-செர்பிய நட்பு ஒத்துழைப்பின் பங்கேற்பாளராகவும், சாட்சியாளராகவும் தொழிலாளர்கள் திகழ்கின்றனர் என்றும் ஷி சுட்டிக்காட்டினார்.
முன்பு, இவ்விரும்பு தொழிற்சாலையின் 30 செர்பிய தொழிலாளர் பிரதிநிதிகள் சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங்கிற்கு கடிதம் அனுப்பி, தொழிற்சாலையின் வளர்ச்சி நிலைமையையும், உள்ளூர் மக்கள் வாழ்வுக்கான மேம்பாட்டில் பங்கினையும் விளக்கிக்கூறி, இத்திட்டப்பணியின் மீது ஷிச்சின்பிங் செலுத்திய கவனத்துக்கு நன்றி தெரிவித்தனர்.