சொந்த ஊர் மற்றும் நாட்டின் மீதான ஷி ச்சின்பிங்கின் ஆழ்ந்த உணர்வு

இன்று சீனப் பாரம்பரிய நிலா விழாவாகும். சீன மக்கள் இணைப்பு மற்றும் சௌசன்னியத்தின் மீதான விருப்பத்தையும், சொந்த ஊர் மற்றும் குடும்பதினர்களின் மீதான நினைவையும் நிலா விழா வெளிப்படுத்துகிறது.


ஷான்ஷி மாநிலம், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் ஊர். அவர் அங்கே பல ஆண்டுகளாக வேலை செய்து வாழ்ந்திருந்தார். கடந்த நூற்றாண்டின் 60ஆவது ஆண்டுகளில், லியாங்ஜியாஹே என்னும் கிராமத்தில் அவர் 7 ஆண்டுகளாக விவசாயப் பணியில் ஈடுப்பட்டார்.

2013ஆம் ஆண்டு, அரசுத் தலைவராகப் பதவி ஏற்ற ஷி ச்சின்பிங் கோஸ்ட்டா ரிக்காவில் பயணம் மேற்கொண்டபோது, அங்குள்ள விவசாயிகளிடம் இந்த அனுபவத்தைக் கூறினார்.
ஹேபெய் மாநிலத்தின் ட்செங்திங் மாவட்டம், அவரது மற்றொரு ஊராகும். அவர் அங்கே 3 ஆண்டுகளாகப் பணி செய்து, இம்மாவட்டக் கட்சிக் கமிட்டியின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ட்செங்திங் மாவட்டம், எனது 2வது ஊர். நீண்டகால வரலாறு, ஒளிவீசும் பண்பாடு, உழைக்கும் மக்கள் ஆகியோர் அங்கே உள்ளனர் என்று அவர் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டார்.
1985ஆம் ஆண்டு, ஷி ச்சின்பிங் ஃபூஜியான் மாநிலத்தில் பணிப் புரியத் துவங்கினார். அவர் கூறியதாவது, அங்குள்ள மலைகள் மற்றும் ஆறுகளின் மீது ஆழ்ந்த உணர்வு கொண்டுள்ளேன் என்றார்.


இவ்வாண்டு செப்டம்பர் 23ஆம் நாள், ஷி ச்சின்பிங், அவரது மனைவி பெங் லீயுவானுடன், ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் பங்கெடுக்க வந்துள்ள வெளிநாட்டு விருந்தினர்களுக்கு வரவேற்பு விருந்தை வழங்கினார். அப்போது அவர் உரை நிகழ்த்துக்கையில், சேஜியாங் மாநிலம் பற்றி உற்சாகமாக அறிமுகம் செய்தார்.


அவர் சேஜியாங் மாநிலத்தில் 6 ஆண்டுகளாகப் பணிப் புரிந்தார். இம்மாநிலத்தின் புதிய வளர்ச்சியை அவர் வழி நடத்தி, நேரில் கண்டார். இவ்வாண்டின் பயணத்தின்போது, சேஜியாங் மீது அவர் மேலும் உயர்வான கோரிக்கை விடுத்தார். பல்வேறு லட்சியங்களை மேலும் விரைவுப்படுத்தி, பொது மக்களின் வாழ்க்கையை மேலும் உயர் நிலைக்கு முன்னேற்ற வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author