சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜனவரி 31ஆம் நாள், நவ்ருவின் 56ஆவது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு, அந்நாட்டின் அரசுத் தலைவர் டேவிட் ரானிபோக் அடேங்க்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.
அண்மையில், சீன-நவ்ரு தூதாண்மையுறவு அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ளது. இரு தரப்புறவு வளர்ச்சி ஒரு புதிய கால கட்டத்தில் காலடி எடுத்து வைத்துள்ளது. ஒரே சீனா எனும் கொள்கையைப் பின்பற்ற நவ்ரு ஏற்றுக்கொண்டதற்கு நான் பாராட்டுகின்றேன்.
இரு தரப்புறவின் வளர்ச்சியில் நான் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றேன். நவ்ருவுடன் சேர்ந்து பாடுபட்டு, ஒன்றுக்கு ஒன்று அரசியல் நம்பிக்கையை ஆழமாக்கி, பயனுள்ள ஒத்துழைப்புகளை முன்னேற்றி, மனிதப் பண்பாட்டு பரிமாற்றத்தை நெருக்கப்படுத்தி, இரு நாடுகளின் மக்களுக்கு நன்மை பயக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.