இவ்வாண்டில் ஆக்கப்பூர்வமான நிதிக் கொள்கை ஆதரவுடன், சீனப் பொருளாதார வளர்ச்சி சீராக உள்ளது. ஆக்ஸ்ட் இறுதி வரை, மாநில அரசாங்கங்களுக்கு நடுவண் அரசு, 9.55 இலட்சம் கோடி யுவான் முதலீடு செய்து, பிரதேசத்தின் நிலையான நிதி இயக்கத்துக்கு உத்தரவாதம் அளித்துள்ளது.
அதே வேளையில், சீன மக்கள் வங்கி, இவ்வாண்டில் 2 முறை கையிருப்புத் தொகை விகிதத்தை குறைத்ததன் மூலம், இடைக்கால மற்றும் நீண்டக்காலத்தில் 1 இலட்சம் கோடி யுவானை விடுவித்துள்ளது. மேலும், 2 முறை வட்டி விகிதத்தைக் குறைத்ததன் மூலம், நிதி திரட்டலின் செலவைக் குறைத்து, நாணயக் கடனின் நியாய வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
மொத்த கடன் தொகை அதிகரித்து வருவதுடன், கடன் கட்டமைப்பும் மேம்பட்டு வருகிறது. முக்கியத் துறைகள் மற்றும் பலவீனமான துறைகளுக்கு நிதி ஆதரவு வலுவடைந்து வருகிறது என்றும் தெரிகிறது.