மாலத்தீவு அரசுத்தலைருடன் ஷிச்சின்பிங் சந்திப்பு

ஜனவரி 10ஆம் நாள் மாலை, சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் மக்கள் மாமண்டபத்தில் சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள மாலத் தீவு அரசுத்தலைவர் முகமது முய்சுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

புத்தாண்டு துவக்கத்தில் முய்சு சீனாவில் பயணம் மேற்கொள்வதற்கு ஷிச்சின்பிங் வரவேற்பு தெரிவித்தார். இவ்வாண்டு சீனாவில் பயணம் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டு அரசுத்தலைவர் முய்சு ஆவார். மேலும், அப்பயணம், முய்சு அரசுத்தலைவராக பதவி ஏற்ற பிறகு மேற்கொண்ட முதலாவது அரசுமுறை பயணமாகவும் உள்ளது. சீனாவும், மாலத் தீவும் இரு தரப்புறவின் வளர்ச்சியில் முக்கிய கவனம் செலுத்தி வருவதை இப்பயணம் காட்டியுள்ளது என்றும் ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.

புதிய நிலைமையில், சீன-மாலத்தீவு உறவு வரலாற்று வாய்ப்பை எதிர்நோக்கி வருகிறது. அரசுத் தலைவர் முய்சுடன் இணைந்து இருநாட்டுறவின் வளர்ச்சிக்கு புதிய திட்டத்தை வகுத்து, புதிய எதிர்காலத்தை உருவாக்கி, சீன-மாலத்தீவு உறவு புதிய கட்டத்தில் காலடியெடுத்துவைக்க வேண்டுமென ஷிச்சின்பிங் விருப்பம் தெரிவித்தார்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author