ஷிச்சின்பிங்-மா யிங்ஜியு சந்திப்பு

Estimated read time 0 min read

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளர் ஷிச்சின்பிங் ஏப்ரல் 10ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் மா யிங்ஜியு தலைமையிலான குழுவினரைச் சந்தித்தார்.


ஷிச்சின்பிங் கூறுகையில், தைவான் நீரிணை இரு கரை உடன்பிறப்புகள், பொது பண்பாடு மற்றும் வரலாற்றைக் கொண்டுள்ளனர். மேலும் முக்கியமாக, தேசம் மீது பொது பொறுப்பையும், எதிர்காலம் மீது பொது ஆசையையும் கொண்டுள்ளோம்.

சீனத் தேசத்தின் ஒட்டுமொத்த நன்மை மற்றும் நீண்டகால வளர்ச்சியின் கோணத்திலிருந்து, இரு கரை உறவு என்ற பொது நிலைமையைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், முதலில் இரு கரை உடன்பிறப்புகள் “தைவான் சுதந்திர சக்தியின்” பிளவு நடவடிக்கை மற்றும் வெளிப்புற சக்தியின் தலையீட்டை உறுதியாக எதிர்த்து, சீனத் தேசத்தின் பொது தாயகத்தை உறுதியாக பாதுகாக்க வேண்டும்.


இரண்டு, சீனத் தேசத்தின் நீண்டகால நன்மையைக் கூட்டாக உருவாக்க வேண்டும். தைவான் உடன்பிறப்புகளுடன் சீனப் பாணி நவீனமயமாக்கத்தின் வளர்ச்சி வாய்ப்பையும், சீனப் பெருநிலப்பகுதியின் முன்னேற்ற சாதனைகளையும் பகிர்ந்து கொண்டுள்ளோம்.


மூன்று, சீனத் தேச பொது சமூகம் என்ற கருத்தை வலுப்படுத்த வேண்டும். இரு கரை உடன்பிறப்புகள் ஒரே குடும்பத்தினர். தைவான் உடன்பிறப்புகள் சீனப் பெருநிலப்பகுதிக்கு வருகை தருவதை அழைக்கிறோம்.
நான்கு, சீனத் தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சியை நனவாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். தைவான் இளைஞர்கள் சீனப் பெருநிலப்பகுதியில் கனவை நனவாக்குவதை வரவேற்கிறோம். இரு கரை இளைஞர்களின் வளர்ப்பு மற்றும் வெற்றிக்கு மேலதிக வாய்ப்புகளை வழங்குவோம் என்று தெரிவித்தார்.


மா யிங்ஜியு கூறுகையில், “1992ஆம் ஆண்டு எட்டப்பட்ட பொது கருத்தில்” ஊன்றி நிற்பதும், “தைவான் சுதந்திரத்தை” எதிர்ப்பதும், இரு கரை உறவின் அமைதியான வளர்ச்சிக்கான பொது அரசியல் அடிப்படையாகும். இரு கரை மக்கள் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை ஆழமாக்கி, சீனத் தேசப் பண்பாட்டைக் கூட்டாக பரவல் செய்து, சீனத் தேசத்தின் மறுமலர்ச்சிக்காக பாடுபட வேண்டும் என்று தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author