இயல்பு நிலைக்குத் திரும்பிய மலை இரயில் சேவை –

Estimated read time 1 min read

மேட்டுப்பாளையம் – உதகை மலை இரயில் பாதையில், ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, ரத்து செய்யப்பட்ட மலை இரயில் சேவை, மூன்று நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்கியது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து, கடந்த மாதம் முதல் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக, உதகை மலை இரயில் சேவை கடந்த ஒரு மாதத்தில் பல முறை ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், இல்குரோவ் பகுதியில் பெய்த மழையின் காரணமாக, மலை இரயில் தண்டவாளப் பாதையில் பாறைகள் உருண்டு விழுந்துள்ளன. மேலும், தண்டவாளத்தின் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

இதன் காரணமாக, கடந்த 20-ஆம் தேதி முதல் மலை இரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து, சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பாதை சரிசெய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மூன்று நாட்களுக்குப் பிறகு, இன்று மேட்டுப்பாளையம் – உதகை மலை இரயில் சேவை மீண்டும் தொடங்கியது. மலை இரயிலில் பயணிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் வந்திருந்தனர்.

சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் மலை இரயிலில் பயணம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர். இந்த பயணத்தின்போது, நீர்வீழ்ச்சிகள், மலைமுகடுகள், வனவிலங்குகள் உள்ளிட்டவற்றைக் கண்டு ரசித்தனர்

Please follow and like us:

You May Also Like

More From Author