இராமேஸ்வரம்: கடலில் எரிந்து நாசமான படகு!

Estimated read time 0 min read

பாம்பனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள விசைப்படகில் தீ விபத்து ஏற்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அடுத்துள்ள பாம்பன் தென்கடல் பகுதியில் காலின்ஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி கப்பல் முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. அங்கு மீன்பிடிப்பதற்கு தயாராகி கொண்டிருந்த மீனவர்கள் இதுகுறித்து காலின்சுக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு பதறிக்கொண்டு ஓடி வந்த காலின்ஸ், சக மீனவர்கள் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார். ஆனால், படகு முழுவதும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு சுமார் ஒரு கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து முதற்கட்ட விசாரணையில் படகில் இருந்த பேட்டரிகளில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author