ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் – பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை

Estimated read time 1 min read

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில், இன்று முதல் அடுத்த மாதம் 24-ந் தேதி வரை ஒரு மாதம் காலம் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி தனது ஓ.பன்னீர்செல்வம் தனது சுற்றுப்பயணத்தை கொங்குமண்டலமான கோவை மாவட்டம் சூலூரில் தொடங்கினார்.

சூலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர், கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனை களை வழங்கி தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.

கோவையில் ஆலோசனை கூட்டம் முடிந்ததும், இன்று மாலை நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் அவர் அங்கு தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

அதனை தொடர்ந்து நாளை (புதன்கிழமை) காலை திருப்பூர் மாவட்டத்திலும், மாலையில் ஈரோடு மாவட்டத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். தொடர்ந்து அவர் ஜனவரி 24-ந் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

Please follow and like us:

You May Also Like

More From Author