கந்துவட்டி கும்பல் அராஜகம் – பிரபல மருத்துவக் கல்லூரி ஊழியர் உயிரிழப்பு!

Estimated read time 1 min read

சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றிய வந்த பூவழகன் என்பவர், கந்துவட்டி கும்பலால் அவமரியாதை செய்யப்பட்டதால், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சேத்தியாத்தோப்பு பகுதியைச் சேர்ந்த பூவழகன், அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி -கோவிந்தசாமியிடம் கந்துவட்டிக்கு பணம் வாங்கியுள்ளார்.

வாங்கிய கடனுக்கு வட்டி சேர்த்து, வாங்கிய தொகையை விட பல மடங்கு பணம் செலுத்திய பிறகும், கூடுதல் பணம் கேட்டு கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தசாமி ஆகியோர் மிரட்டியுள்ளனர். பின்னர், பூவழகனை கடத்திச் சென்று தகாத வார்த்தைகளால் திட்டி, முட்டி போட வைத்து அவமானப்படுத்தியுள்ளனர்.

இதனால், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது, மயங்கி விழுந்தார். அவரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்று அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author