கோவை – பெங்களூரு இடையே வந்தே பாரத் இரயில் – 30-ம் தேதி தொடக்கம்!

Estimated read time 1 min read

கோவை – பெங்களூரு இடையே வந்தே பாரத் இரயில் சேவை வரும் டிசம்பர் மாதம் 30-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்திய இரயில்வே, வந்தே பாரத் என்ற பெயரில் நவீன வசதிகளுடன் கூடிய அதிவிரைவு சொகுசு இரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் ஜி.பி.எஸ் டிராக்கர், கேமரா, செல்போன் சார்ஜர், தானியங்கி கதவுகள் மற்றும் குளிர்சாதன வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது.

வந்தே பாரத் இரயில், அதிகபட்சமாக மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் செல்லும் என்பதால், பயண நேரம் குறையும் இதனால், வந்தே பாரத் இரயில்களுக்கு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்கள் இடையே 25-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், தமிழகத்தில் சென்னை சென்ட்ரல் – மைசூரு, சென்னை சென்ட்ரல் – கோவை ஆகிய 2 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, கோவை காரமடை தனியார் திருமண மண்டபத்தில் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் கலந்து கொண்டார். அப்போது, கோவை – பொள்ளாச்சி முன்பதிவு இல்லாத இரயில் சேவையை தொடங்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அவர், அம்ரி பாரத் திட்டத்தில், கோவை இரயில் நிலையம் சேர்க்கப்பட்டுள்ளது என்றவர், கோவை – பெங்களூரு இடையே வந்தே பாரத் இரயில் சேவை வரும் டிசம்பர் மாதம் 30-ம் தேதி துவங்க உள்ளது என்றார்.

இதனால், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநில மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author