கடலூர் மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் 19-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இன்று காலை சுனாமி பேரலையில் இறந்த நபரின் குடும்பத்தினர்கள், உறவினர்கள் கடலூர் தேவனாம் பட்டினம் மற்றும் சோனாங் குப்பம் பகுதிக்கு வந்தனர்.
பின்னர் கடற்கரையில் உயிரிழந்தவர்களை நினைத்து கண்ணீர் விட்டு அழுதபடி கடல் அலைகளை பார்த்து கும்பிட்டனர். பின்னர் கடற்கரை ஓர மாகவே கற்பூரம், விளக்கு, ஊதுபத்தி, கற்பூரம் ஆகியவற்றை ஏற்றி இறந்தவர்களுக்கு மண்டியிட்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
மேலும் பலர் தாங்கள் கொண்டு வந்த பால் மற்றும் கூடை நிரம்ப கொண்டு வந்த பூக்களையும் கடல் அலையில் பாலை ஊற்றியும், பூக்களைத் தூவியும் கண்ணீர் வடித்த படி நினைவு அஞ்சலி செலுத்தினர்.