சென்னையில் மாநில அளவிலான செஸ் போட்டி!

Estimated read time 1 min read

மிக்ஜாம் புயல், பெரும் மழையால் ஒத்திவைக்கப்பட்ட மாநில அளவிலான செஸ் போட்டி, சென்னை சிட்லப்பாக்கத்தில் நாளை மறுநாள், அதாவது டிச.17 -ம் தேதி நடைபெறுகிறது

சென்னை தாம்பரத்தில் உள்ள, பிரபல தனியார் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், முதலாவது மாநில அளவிலான செஸ் போட்டி, சென்னை சிட்லப்பாக்கத்தில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில், கடந்த 3 -ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மிக்ஜாம் புயல், பெரும் மழையால்  மாநில அளவிலான செஸ் போட்டி, ஒத்திவைக்கப்பட்டது.

மழை பாதிப்புகள் குறைந்த நிலையில், நாளை மறுநாள் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் 8, 10, 13 மற்றும் 25 வயதிற்கு உட்பட்ட இருபாலருக்கும் தனித்தனியாகப் போட்டிகள் நடைபெறும். பிடே விதிப்படி, சுவிஸ் அடிப்படையில் போட்டிகள் நடைபெறுகின்றன.

அனைத்து பிரிவிலும், முதல் 20 இடங்களைப் பிடிக்கும் நபர்களுக்குக் கோப்பைகள் வழங்கப்படும் என போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author