தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை;

Estimated read time 0 min read

கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் கோடை மழை பெய்து வருகிறது.
கத்திரி வெயில் முடிய இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில், கனமழையால் தமிழகத்தின் வெப்ப நிலை குறைந்துள்ளது.

இந்த நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக தென் மாவட்டங்களான தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் மிக கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இயற்கை பேரிடர்களை சமாளிக்க, மருத்துவக்குழுவினரும், மீட்பு குழுவினரும் தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author