தமிழகத்தில் 35 டி.எஸ்.பிக்கள் பணியிட மாற்றம்

Estimated read time 0 min read

தமிழகத்தில் திடீரென 35 டி.எஸ்.பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கான பட்டியலையும் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தற்போது வெளியிட்டுள்ளார்.

அதாவது, அடையாறு காவல் உதவி ஆணையராக பணியாற்றி வந்த நெல்சன், தற்போது தாம்பரம் காவல் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையராக இருந்த மோகன் தற்போது கடலூர் திட்டக்குடி காவல் உதவி ஆணையராக பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அடுத்ததாக, காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருள் செல்வன் தற்போது தாம்பரம் போக்குவரத்து காவல் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், தாம்பரம் காவல் உதவி ஆணையராக இருந்த சீனிவாசன் தற்போது சென்னை சைதாப்பேட்டை காவல் உதவி ஆணையராகவும், சேலையூர் காவல் உதவி ஆணையர் முருகேசன் தற்போது அடையாறு காவல் உதவி ஆணையராகவும் பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.

Please follow and like us:

You May Also Like

More From Author