மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்:- தமிழ்நாட்டில் நேற்று 680 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 38 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 188 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு 39 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
நேற்று தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.