தமிழக சட்ட மன்ற கூட்டத் தொடர் – ஆளுநருக்கு நேரில் அழைப்பு விடுத்த சபாநாயகர்!

Estimated read time 1 min read

தமிழக சட்ட மன்ற கூட்டத் தொடர் நடைபெறுவதையொட்டி, தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு, சபாநாயகர் அப்பாவு அழைப்பு விடுத்தார்.

2024 நடப்பாண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவையில் காலை 10 மணிக்குப் பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற உள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அன்றைய தினம் உரை நிகழ்த்த உள்ளார். இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 19 -ம் தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-2025 -ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்ய உள்ளார்.

20 -ம் தேதி 2024-25 -ம் ஆண்டிற்கான முன்பண மானிய கோரிக்கையினையும், 21 -ம் தேதி 2023-24 -ம் ஆண்டிற்கான முன்பணச் செலவின மானியக் கோரிக்கையினையும் தாக்கல் செய்கிறார்.

இந்த நிலையில், தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடரில் கலந்து கொள்ள வேண்டி, தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிவுக்கு தமிழக சபாநாயகர் அப்பாவு அழைப்பு விடுத்தார். சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில், ஆளுநர் ரவியை, சபாநாயகர் அப்பாவு நேரில் சந்தித்தார்.

இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author