தமிழக மீனவர்கள் விடுதலை!

Estimated read time 1 min read

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, கடந்த 14-ஆம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை, விடுதலை செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 10 மீனவர்கள், கடந்த 14-ஆம் தேதி இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களைச் சுற்றி வளைத்து, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த இரண்டு படகுகளையும், வலைகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

பின்னர், மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு இலங்கை பருத்திதுறை நீதிமன்றத்தில் நடைபெற்றது.

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 10 பேரும் பருத்திதுறை நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, நீதிபதி கைது செய்யப்பட்ட 10 மீனவர்கள் மீண்டும் இலங்கை கடற்பகுதிக்குள் வந்தால், 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்ற நிபந்தனையுடன் அவர்களை விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தார். மீனவர்கள் இன்னும் சில நாட்களில், தமிழகம் திரும்பி வர உள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author