தமிழக மீனவர்கள் 6 பேர் கைது!

Estimated read time 0 min read

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்த 2 படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செல்வதும், அவர்களின் விசைப்படகுகளைப் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி உள்ளது.

இந்த நிலையில், இராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் 2 விசைப் படகுகளில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். மீனவர்கள் கச்சத்தீவு, நெடுந்தீவு பகுதிகளுக்கு இடையே கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களைச் சுற்றி வளைத்து, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த இரண்டு படகுகளையும், வலைகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 6 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர். இதனை அடுத்து, 6 மீனவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author