தமிழ்ப் புத்தாண்டு – பிரதமர் மோடி வாழ்த்து!

Estimated read time 1 min read

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சித்திரை மாதம் முதல் நாள், தமிழ் புத்தாண்டாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சோப கிருது ஆண்டு விடைபெற்று, ‘குரோதி’ புத்தாண்டு பிறந்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஒருவருக்கொருவர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, நாட்டின் முக்கியத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் தமிழ் மக்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! pic.twitter.com/oVOc1pO8Ln

— Narendra Modi (@narendramodi) April 14, 2024

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தமிழ் கலாச்சாரத்தின் துடிப்பான மரபுகள் மற்றும் ஆழமான பாரம்பரியத்தின் வெளிப்பாடாக திகழும் புத்தாண்டு வாழ்த்துகள்.

வரும் ஆண்டு அமைதி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பைக் கொண்டுவரட்டும். இந்த ஆண்டு, அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, வெற்றி மற்றும் நிறைவைக் கொண்டுவரட்டும்“ என்று பதிவிட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author