பரிபூரண ஆரோக்கியத்தோடு வருவேன் :அறுவை சிகிச்சைக்கு முன் பேசிய வைகோ 

Estimated read time 1 min read

மருமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ, திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் எதிர்பாராதவிதமாக விழுந்ததால் அவரது வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று அவரது மகன் உறுதி செய்துள்ளார்.
மதிமுக முதன்மைச் செயலாளரும், வைகோவின் மகனுமான துரை வைகோ இன்று தனது தந்தையின் உடல் நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

இந்த விபத்து கடந்த சனிக்கிழமை இரவு நடந்ததாகவும், எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை தேவை என்றும் துரை வைகோ கூறியுள்ளார்.

விபத்திற்கு பிறகு உடனடியாக சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வைகோ, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Please follow and like us:

You May Also Like

More From Author