பிப். 11-ல் 44 மின்சார இரயில்கள் ரத்து – காரணம் என்ன?

Estimated read time 1 min read

கோடம்பாக்கம் – தாம்பரம் இடையே இரயில்வே தண்டவாள பராமரிப்புப் பணிகள் நாளை காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை நடைபெற உள்ளதால், 44 மின்சார இரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் – விழுப்புரம் இரயில்வே வழித்தடத்தில் கோடம்பாக்கம் – தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நாளை காலை 11.00 மணி முதல் மதியம் 3.30 மணி வரை நடைபெற உள்ளது.

இதனையொட்டி சென்னை கடற்கரை – தாம்பரம், கடற்கரை – செங்கல்பட்டு, தாம்பரம் – கடற்கரை, செங்கல்பட்டு- கடற்கரை, காஞ்சிபுரம் – கடற்கரை, திருமால்பூர் – கடற்கரை இடையே இயக்கப்படும் 44 மின்சார இரயில்கள் ரத்துசெய்யப்பட உள்ளது.

அதன்படி சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு (காலை 10.30, 10.40, 10.50, 11.00, 11.10, 11.20, 11.30, 11.40, 11.50, மதியம் 12, 12.10, 12.20, 12.30, 12.50, 1, 1.15, 1.30, 1.45, 2, 2.15, 2.30) ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார இரயில்களும், தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு (காலை 10.05, 10.15, 10.25, 10.45, 10.55, 11.25, 11.35, மதியம் 12, 12.15, 12.45, 1.30, 1.45, 2.15, மாலை 4.30) ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார இரயில்களும், செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு (காலை 9.40, 10.55, 11.30, மதியம் 12, 1) ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார இரயில்களும், காஞ்சிபுரம் – கடற்கரை (காலை 9.30 மணி), திருமால்பூர் – கடற்கரை (காலை 11.05) ஆகிய மின்சார இரயில்களும் என மொத்தம் 44 மின்சார இரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

பயணிகள் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 11.55, மதியம் 12.45, 1.25, 1.45, 1.55, 2.40, 2.55 மணிக்கு சிறப்பு இரயில்கள் இயக்கப்படும். மறுமாா்க்கமாக செங்கல்பட்டில் இருந்து தாம்பரத்துக்கு காலை 9.30, 9.40, 10.55, 11.05, 11.30, மதியம் 12.00, 1.00 மணிக்கு சிறப்பு இரயில்கள் இயக்கப்படும் எனத் தெற்கு இரயில்வே தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author