பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!

Estimated read time 0 min read

தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 66 ஐ நிறைவேற்றவும், தமிழகத்தில் கொப்பரைத் தேங்காய் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 9 ஆண்டுகளில், கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்த பட்ச ஆதார விலை, உடைக்கப்பட்ட கொப்பரைக்கு 113% மற்றும் முழு கொப்பரைக்கு 118% விலை உயர்த்தியிருப்பது, கடினமாக உழைக்கும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்காக, நமது பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டுள்ள முயற்சிகளை வெளிக்காட்டுகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டை விட, உடைக்கப்பட்ட கொப்பரைக்கு ஒரு குவிண்டாலுக்கு ₹300 மற்றும் முழு கொப்பரைக்கு ₹250 என, 2024 ஆண்டிற்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ள இன்றைய அறிவிப்பால், தமிழகத்தில் உள்ள தென்னை விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள்.

விவசாயிகள் பலனடையும் வண்ணம், கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு அறிவித்துள்ள  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, தமிழக பாஜக சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 66 ஐ நிறைவேற்றவும், தமிழகத்தில் கொப்பரைத் தேங்காய் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author