புதிய பென்ஷன் திட்டம் வேண்டாம்…. சாலை மறியலில் ஈடுபட முயற்சி…. 48 பேர் அதிரடி கைது…!!

Estimated read time 0 min read

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் நிர்வாகிகள் நெற்றியில் நாமமிட்டு மறியலுக்கு முயன்றனர்.

தி.மு.க தேர்தல் அறிக்கையில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வருவோம் என கூறியது. சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியும் பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வரவில்லை.

இதனால் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் சி.பி.எஸ் ஒழிப்பு இயக்க நிர்வாகிகள் நெற்றியில் நாமம் அணிந்து மறியலில் ஈடுபட முயன்றனர்.

சாலை மறியலில் மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் முன்னிலை வகிக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் காளிமுத்து, அப்துல் பாஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 48 பேரை கைது செய்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author