முதல்வர் மு.க.ஸ்டாலின் பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை

Estimated read time 0 min read

தமிழகத்தில் சமூக சீர்திருத்தம், ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண் விடுதலைக்காக தந்தை பெரியார் தன் வாழ்நாள் முழுவதும் போராடினார்.

1973ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி தனது 94ஆவது வயதில் காலமானார்.பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அவரைத் தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா எம்.பி. மற்றும் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Please follow and like us:

You May Also Like

More From Author