திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சார்பில் மார்கழி நாட்டியாஞ்சலி விழா ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு தமிழ்ச் சங்க தலைவர் வே. சிவராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்திரா பக்தி பாடல்களை பாடினார். செயலாளர் ஆ. மயில்வாகனன் வரவேற்றார். நாட்டிய குழு தலைவர் எழிலரசி மதனகோபால் முன்னிலை வகித்தார். காஞ்சிபுரம் ஸ்ரீ ஹரி நாட்டிய பள்ளி மாணவர்கள் பங்கேற்ற நாட்டியாஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
இதில் பல்வேறு தமிழிசை பாடல்களுக்கு நடனம் ஆடினர். நிகழ்வை முதுகலை ஆசிரியர் ராமஜெயம் தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் மு. பிரபாகரன், ஏழுமலை, கோ. ஸ்ரீதர், பிச்சாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக அற வழி என்ற தலைப்பில் உரையரங்கம் நடைபெற்றது.
இறுதியில் இராமமுர்த்தி நன்றி கூறினார்.