வித்தியாச கட்டணம்: விரைவில் பணம் திரும்ப வழங்கப்படும்…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!

Estimated read time 0 min read

தமிழகத்தின் பிறப்பகுதியில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் சென்று வந்த நிலையில் சமீபத்தில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது.

மற்ற பகுதியில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அரசு விரைவு பேருந்துகளில் 30 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்தவர்களுக்கான வித்தியாச கட்டணம் விரைவில் திருப்பி அளிக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், முன்னர் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து கிளம்புவதாக இருந்த நிலையில், தற்போது கிளாம்பாக்கத்தில் இருந்து கிளம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைப்பட்ட கட்டணத்தை பேருந்தில் நடத்துனரிடம் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Please follow and like us:

You May Also Like

More From Author