வைரமுத்துவுக்கு ஆர்டர் போட்ட முதல்வர்….

Estimated read time 0 min read

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ள ‘மகா கவிதை’ என்ற நூல் வெளியீட்டு விழா இன்று (01.01.2024) நடைபெற்றது.

இந்த நூலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக் கொண்டார்.

இந்த நூல் வெளியீட்டு விழாவில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நூலில் பூதம், திசை, காலம், திணை, பூமி ஆகிய தலைப்புகளில் வைரமுத்து கவிதைகளை படைத்துள்ளார்.

அப்போது பேசிய அவர், கலைஞரின் வரலாற்றை கவிதையாக எழுதிக் தாருங்கள் என உங்களிடம் கோரிக்கை வைக்கிறேன். வைரமுத்துவுக்கு ஒரு ரசிகனாக என்னுடைய வேண்டுகோள் இது.

இன்னும் சொல்லப்போனால் கட்டளை என்றார். கலைஞர் இன்று இருந்திருந்தால் வைரமுத்துவை உச்சிமுகர்ந்து பாராட்டியிருப்பார் என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author